Sunday 27 September 2015

111–வது பிறந்தநாள் விழா: சி.பா.ஆதித்தனார் சிலைக்கு வை.கோ மாலை அணிவித்தார்


‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனாரின் 111–வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை எழும்பூர் ஆதித்தனார் சாலையில் உள்ள சி.பா.ஆதித்தனார் சிலை மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

தினத்தந்தி, மாலைமலர், தந்தி டி.வி., ராணி, ராணி முத்து, ராணி பிரிண்டர்ஸ், ஹலோ எப்.எம்., கோகுலம் கதிர், இந்தியா கேப்ஸ், கெய் டிராவல்ஸ், சுபஸ்ரீ ரியாலிட்டி, ஏ.எம்.என் ஊழியர்கள் மரியாதை செலுத்தினார்கள்.

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, முன்னாள் மத்திய மந்திரியும் காங்கிரஸ் அகில இந்திய செயலாளருமான திருநாவுக்கரசர், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு,  விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பா.ம.க. துணை பொதுச் செயலாளர் ஏ.கே.மூர்த்தி, முன்னாள் எம்.பி. எஸ்.ஆர்.ஜெயதுரை. ஆகியோர் சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

No comments:

Post a Comment