Saturday 26 September 2015

சீனாவில் வேண்டுதலை நிறைவேற்ற மலை கோவிலுக்கு தவழ்ந்தப்படி ஏறிய பக்தர்கள்



சீனாவின் செங்குவான் பகுதியில் ஒரு மலைக் கோவில் இருக்கிறது. கடந்த வாரம் மலையடிவாரத்தில் இருந்து 3 மணி நேரம் கைகளாலும் கால் முட்டிகளாலும் 130 பேர் தவழ்ந்து சென்று மலைக்கோவிலில் வேண்டுதலை நிறைவேற்றியுள்ளனர். 
இந்த வேண்டுதலில் 5 வயது குழந்தை முதல் 81 வயது முதியவர் வரை கலந்துக் கொண்டதோடு தங்கள் வேண்டுதலையையும் நிறைவேற்றி வந்தனர்.
சீனா பக்தர்கள் தவழ்ந்து வந்ததுப் போல் அங்கு வந்த வெளிநாட்டு சுற்றுப் பயணிகளும் ஆர்வமுடன் கலந்துக் கொண்டனர்.  ‘இதுவும் ஒரு பயிற்சி போல் எங்களுக்கு அமைந்தது’ என்று சுற்றுப்பயணிகள் தங்கள் கருத்துகளை கூறினர். ஆரம்பத்தில் கை, கால்களில் வலிகள் ஏற்பட்டாலும்,  தாங்கள் மகிழ்ச்சியடைந்தாகவும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment