Wednesday 30 September 2015

கடற்படையில் இணைந்தது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட போர்க்கப்பலான, 'ஐ.என்.எஸ்.,


உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட போர்க்கப்பலான, 'ஐ.என்.எஸ்., கொச்சி' இன்று (செப்டம்பர் 30ம் தேதி), கடற்படையில் இணைந்தது . மும்பை கடற்படைதளத்தில் நடைபெற்ற கலந்து கொண்ட மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பரிக்கர் இதனை நாட்டிற்கு அர்ப்பணித்துள்ளார்.
உள்நாட்டு தயாரிப்பில், இரண்டாவது மிகப்பெரிய போர்க்கப்பலான, ஐ.என்.எஸ்., கொச்சியில், விண்ணில் பாய்ந்து சென்று தாக்கும் ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன. ஐஎன்எஸ் கொச்சி, இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட 2வது மிகப் பெரிய போர்க்கலாகும். 7500 டன் எடை கொண்ட ஐஎன் எஸ் கொச்சி, போர் விமானங்களை தாங்கிச் சென்று தாக்கக் கூடியதாகும்.
சுமார் ரூ4000 கோடிக்கு அதிகமான முதலீட்டில் இந்த போர்க்கப்பல் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த போர்க்கப்பலில் 40 கடற்படை அதிகாரிகளும், 350 வீரர்களும் பணியாற்ற உள்ளனர். உள்நாட்டில் தயாரானா ஐஎன்எஸ் கோல்கட்டா கடந்த ஆண்டு இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. ஐஎன்எஸ் கொச்சியை தொடர்ந்து 2016 ம் ஆண்டு இறுதியில் ஐஎன்எஸ் சென்னையும், 2018-2019 ம் ஆண்டில் ஐஎன்எஸ் விசாகப்பட்டினமும் இந்திய கடற்படையில் இணைக்கப்பட உள்ளன. ஐஎன்எஸ் கொச்சி
இந்திய கடற்படைக்கு கூடுதல் பலமாக அமையும். இந்திய பெருங்கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பை பலப்படுத்தவும் இது பயன்படுத்தப்படும். என மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கரும் ஐஎன்எஸ் கொச்சி பற்றி புகழ்ந்துரைத்துள்ளார்.

No comments:

Post a Comment