Friday 25 September 2015

சட்டப் பேரவைக் கூட்டம் வெறும் அரசியல் நாடகம்: எதிர்கட்சித்தலைவர் பரபரப்பு புகார்


புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டம் கூட்டப்பட்டது ஆளும் என்.ஆர். காங்கிரஸ் - அதிமுக சேர்ந்து நடத்திய அரசியல் நாடகம் என எதிர்கட்சித் தலைவர் வி.வைத்திலிங்கம் புகார் கூறியுள்ளார்.
மழைக்காலக் கூட்டத் தொடர் வெறும் 8 நிமிடங்களில் நடந்து முடிந்த பிறகு, சட்டப்பேரவைக் கூட்டம் முடிவுற்ற பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சட்டப்பேரவைக் கூட்டம் 8 நிமிடங்களில் முடிவுற்றது. மக்கள் பிரச்னைகளை கூட விவாதிக்க நேரம் தராமல் ஒத்தி வைத்துள்ளனர். ஆளும் என்.ஆர். காங்கிரஸூம் - அதிமுகவும் அரசியல் நாடகத்தை நடத்தி உள்ளனர். ஆளும் கட்சி எம்.எல்.ஏக்களே கேள்வி கேட்பர் என்ற பயத்தில் பேரவையை அவசரமாக ஒத்தி வைத்து விட்டனர் என்று வைத்திலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார்.

No comments:

Post a Comment