Sunday 20 September 2015

காவல்துறை வரலாற்றையே ஒரு திருப்பம் திருப்பி விட்ட மறைந்த டி.எஸ்.பி யின் உடல் சொந்த ஊரில் அடக்கம்!


மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்ட நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு  டிஎஸ்பி  விஷ்ணு பிரியா உடல் சொந்த ஊரான கடலூர் மாவட்டம் கோண்டூரில் அடக்கம் செய்யப்பட்டது.
ஓமலூரை சேர்ந்த வாலிபர் கோகுல்ராஜ் கொலை வழக்கை திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த 18ஆம் தேதி டிஎஸ்பி விஷ்ணுபிரியா திருச்செங்கோட்டில் உள்ள வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இந்த சம்பவத்தால் டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு மற்றும் கோகுல்ராஜ் கொலை வழக்கு ஆகிய இரு வழக்குகளையும் சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
 
இதனிடையே, தற்கொலை செய்து கொண்ட விஷ்ணுபிரியா உடல் நேற்று அவரது சொந்த ஊரான கடலூர் அருகே உள்ள கோண்டூருக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு அரசியல் பிரமுகர்கள், காவல்துறை அதிகாரிகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இன்று காலை விஷ்ணுபிரியா உடல் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, கோண்டூரில் அடக்கம் செய்யப்பட்டது.

இதனிடையே, விஷ்ணுபிரியா தற்கொலை குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி திமுக, விடுதலை சிறுத்தை, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினர் நெல்லிக்குப்பத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் கலைந்து சென்றனர்.
 
 

No comments:

Post a Comment