Tuesday 22 September 2015

கரூர் மேலையார் அறிவிப்பு - கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கம் - திருக்குறள் பேரவை – கரூர் சார்பில் 1000 க்கும் மேற்பட்ட பல்துறை புதிய நூல்கள் கண்காட்சி, விற்பனை


கரூர் மேலை.பழநியப்பன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.,
கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கம் - திருக்குறள் பேரவை – கரூர் சார்பில் 1000 க்கும் மேற்பட்ட பல்துறை புதிய நூல்கள் கண்காட்சி, விற்பனை
நாள் : 25.09.2015 முதல் 02.10.2015 வரை
இடம் : திருக்குறள் பேரவை அலுவலகம், டாக்டர் சிவராமன், சர்க்கரை நோய் மருத்துவமனை எதிரில், 72 சீனிவாச புரம் – கரூர்
நேரம் : காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை
அன்புடையீர் !
வணக்கம்,
வள்ளுவம், நீதி நூல்கள், சிறுகதைகள், பக்தி, வரலாறு, யோகா, தலைவர்கள், தன்னம்பிக்கை, பொது அறிவு, இலக்கியம், தமிழ் வரலாறு, தமிழ் வைத்தியம், புகழ் பெற்ற பிரபல நாவல்கள், ஜோதிடம், பசுமை, தேச விடுதலை, எளிய இலக்கணம், தத்துவம், ஜென் கதை, ஆவிக் கதை, மேலை நாட்டு அறிஞர்கள் வரலாறு, ஐ.ஏ.எஸ் தேர்வு பற்றி நூல்கள், டி.என்.பி.எஸ்.சி தேர்வு பற்றிய நூல்கள், போட்டித்தேர்வு வழிகாட்டிகள், சட்டம் உள்ளிட்ட தலைப்புகளில் புத்தம் புதிய நூல்கள் விற்பனைக்கு வந்துள்ளன. தாங்கள் வருகைதந்து தங்கள் நண்பர்களுக்கும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் தகவல் தந்து கலந்து கொள்ளச் செய்தும் சிறப்பிக்க வேண்டுகிறேன்
           ‘’புத்தகங்கள் வாங்குவது
                                      புது வாழ்வைத்தேடுவது”
  அன்புடன்

    எம்.ஜே.எப்.அரிமா.மேலை.பழநியப்பன் – செயலாளர் – திருக்குறள் பேரவை

No comments:

Post a Comment