Monday 28 September 2015

நட்சத்திர ஹோட்டலில் ஜெயம் ரவியுடன் தகராறு : குத்துச்சண்டை வீரர் கைது ?

நட்சத்திர ஹோட்டலில் ஜெயம் ரவியுடன் குத்துச்சண்டை வீரர் ஒருவர் தகராறில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
ஜெயம் ரவி, ஒரு விருந்தில் பங்கேற்க நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு தன் உறவினர்களுடன் சென்றுள்ளார். விருந்து முடிந்து அங்கிருந்து கிளம்பியபோது, மதுரையைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரர் சுதர்சன் அண்ணாதுரை மற்றும் அவரது நண்பர்களுக்கும், ஜெயம் ரவியின் உறவினர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது.
 
ஹோட்டலில் இருந்த காவலர்கள் தடுத்திருக்கிறார்கள். இந்த தகராறில், சுதர்சன் தரப்பினர் தாக்கியதில், ஜெயம் ரவியின் உறவினர் ஜாய் ஆனந்துக்கு காயம் எற்பட்டதாகவும், அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.  பிறகு ஜாய் ஆனந்த், சுதர்சன் மீது போலிஸில் புகார் கொடுத்துள்ளார்.
 
போலிஸார் நடத்திய விசாரணையில் சம்பவம் நடந்த போது ஜெயம் ரவி அங்கிருந்ததாகவும், அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் எல்லா காட்சிகளும் பதிவாகியுள்ளதாகவும் தெரிகிறது. ஜெயம் ரவியும் தாக்கப்பட்டாரா என்று போலிஸார் விசாரித்து வருகிறார்கள். 

No comments:

Post a Comment