Monday 21 September 2015

வை.கோ கூற வந்த கருத்து வேறு கருணாநிதி எடுத்த முடிவு - எப்படி சரியாகிடும் - சவால் விடுகின்றேன்: வை.கோ - மறுமலர்ச்சி இணையதளம் பட்டையக்கிளப்புது


மறுமலர்ச்சி தி.மு.க பொதுச்செயலாளர் மு.க.தமிழரசன் மகன் திருமண விழாவில் பேசியது ஒன்று அதை தி.மு.க தலைவர் கருணாநிதி புரிந்து கொண்டது வேறு, இதை மறுமலர்ச்சி தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ தொலைகாட்சியிலும் கூறி விட்டார். ஆனாலும் மறுமலர்ச்சி இணையதளம் விட்டப்பாடில்லை, வெகு வேகமாக பரப்பி வருகின்றனர். என்னவென்றால்
சவால் விடுகின்றேன்:
மு.க.தமிழரசு மகன் திருமண விழாவில் தலைவர் 13 நிமிடங்கள் பேசினார்.அதில் கருணாநிதி தன்னுடைய திருமணத்திற்கு வர இயலாமல் வீட்டிற்கு வந்ததையும்,தம்பி இல்லத் திருமணத்தை நடத்தி வைத்ததையும் பேசினார்.
அதன் பின்பு அரசியலமைப்பு சட்டத்தை எரிப்பதில் கருணாநிதியின் துரோகத்தை வெளிச்சமிட்டுக் காட்டினார்.பின்பு பேராசிரியர் நன்னன் அவர்களது பேச்சை மேற்கோள்காட்டி ,திராவிட இயக்கத்தை பிரளயமே வந்தாலும் அழிக்க முடியாது என்று பேசினார்.
எந்த இடத்திலும் கருணாநிதியை திராவிட இயக்கத்தைக் காப்பார் என்று கூறவில்லை.என்னிடம் முழுப்பேச்சு ஆடியோவும் உள்ளது.வேண்டுமென்றால் முழுதும் கேட்டுப் பாருங்கள்.வெற்று வாய்ச்சவடால் வேண்டாம்.

No comments:

Post a Comment