Wednesday 30 September 2015

நாட்டையே உலுக்கிய மும்பை ரயில் குண்டு வெடிப்பு வழக்கு: ஐவருக்கு தூக்கு; 7 பேருக்கு ஆயுள் தண்டனை


2006ம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மும்பை ரயில்களில் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பு வழக்கை விசாரித்து வந்த மும்பை சிறப்பு நீதிமன்றம், இன்று குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்களை அறிவித்தது.
அதில், மும்பை ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் 12 பேரில் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதிப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர். குற்றவாளிகள் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மும்பை ரயில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 188 பேர் மரணம் அடைந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 13 பேரில் 12 பேர் குற்றவாளிகள் என்று சில நாட்களுக்கு முன்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment