Saturday 19 September 2015

முக்கியமான காலக்கட்டத்தில் இருக்கிறோம்: வைகோ பேட்டி





மதிமுக மாவட்ட நிர்வாகிகளின் கூட்டம் சென்னையில் எழும்பூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அக்கட்சியின் உயர்நிலைக்குழுக் கூட்டம்  நடைபெற்றது. அக்கட்சியின் அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. 

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, 

எங்கள் இயக்கத்தில் இருந்து அண்மையில் விலகிச் சென்ற கழகப் பொருளாளர் டாக்டர் மாசிலாமணியின் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்தும், சேலம் மாவட்டத்தில் இருந்தும், காஞ்சி மாவட்டத்தில் இருந்தும் ஏராளமான தோழர்கள் அங்கு கூட்டங்கள் நடத்தி அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை கொண்டு வந்தார்கள். அவர்களை சந்தித்தப் பிறகுதான் நாங்கள் உயர்நிலைக் குழு கூட்டத்தை ஆரம்பித்தோம். 

மதிமுக ஒரு முக்கியமான காலக்கட்டத்தில் உங்களை சந்திக்கிறது. இந்த இயக்கத்தின் உயர்நிலைக் குழுக் கூட்டம் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி கூட்டப்பட்டு, அதனைத் தொடர்நது மாவட்டச் செயலார்கள் கூட்டமும் நடைபெற்ற பின்னர் எடுக்கப்பட்ட முடிவுகள் தீர்மானமாக அறிவிக்கப்பட்டன. 

இங்கு எடுக்கப்பட்ட முடிவுகளைத்தான் மாநாட்டில் என்னுடைய உரையில் தெரிவித்து, திமுகவுடனும், அதிமுகவுடனும் எக்காரணத்தைக் கொண்டும் கூட்டணி அமைப்பதில்லை. மக்கள் நலக் கூட்டியக்கத்தை முன்னெடுத்துச் செல்வது என்று மாநாட்டின் பிரகடனமாக செய்யப்பட்டது.

அதன் பின்னர் மதிமுகவின் காஞ்சி மாவட்ட செயலாளர் பாலவாக்கம் சோமு அந்த முடிவை ஏற்க இயலாது என்று சில காரணங்களை சொல்லி வெளியேறி திமுகவில் இணைந்தார் என்றார்.

No comments:

Post a Comment