Tuesday 25 August 2015

நடைபெற்று கொண்டு இருக்கின்ற சட்டமன்ற கூட்ட தொடர் மக்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு நடைபெறும் என்று நான் நம்புகின்றேன் குறிப்பாக தமிழகத்தில் உள்ள முக்கிய பிரச்சனைகளை பேசி தீர்க்கின்ற அவையாக அமையவேண்டும் என த,மா,கா தலைவர் ஜி.கே.வாசன் கரூரில் பேட்டி.

நடைபெற்று கொண்டு இருக்கின்ற சட்டமன்ற
கூட்ட தொடர் மக்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு நடைபெறும் என்று நான் நம்புகின்றேன்
குறிப்பாக தமிழகத்தில் உள்ள
 முக்கிய பிரச்சனைகளை
பேசி தீர்க்கின்ற அவையாக அமையவேண்டும் என த,மா,கா தலைவர் ஜி.கே.வாசன் கரூரில் பேட்டி.
 



கரூர் பைபாஸ் சாலையில் உள்ள தனியார்
மண்டபத்தில் தமிழ் மாநில காங்கிரசின் கோவை மற்றும் தஞ்சை மண்டல இளைஞர் அணி மாநாடு நடைபெற்றது.இந்த
இரண்டு மண்டலங்களிலிருந்தும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.இவ்விழாவில்
கலந்து கொண்ட கட்சியின் மாநில தலைவர் ஜி,கே,வாசன் செய்தியாளர்கள் கூட்டத்தில், தேசிய
நாட்டு நலப்பணிதிட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது,இதில் தமிழகத்தில் உள்ள பள்ளி
கல்லூரி மாணவர்கள் இளம் வயதில் சமூகபணி,நல்லபழக்க வழக்கங்கள் பெற்று வருகிறார்கள் இதை
மத்திய அரசு இதற்கான ஊக்கதொகையை பாதியாக குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவது நல்லது
அல்ல ,மாநில அரசு இதற்காக மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்,மதுக்கடைகளை மூடுவது சம்பந்தமாக
பொருளாதார நிபுணர்கள்,சமூக ஆர்வலர்கள்,அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு
கருத்து கேட்க வேண்டும் அந்த கருத்தின் அடிப்படையில் மதுக்கடைகளை முற்றிலும் மூடுவதாகவோ
அல்லது படிப்படியாக மூடுவது பற்றி இந்த சட்டமன்ற கூட்டதொடரில் அறிவிப்பு வெளியிடவேண்டும்,
நடைபெற்று கொண்டு இருக்கின்ற சட்டமன்ற கூட்ட தொடர் மக்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு
நடைபெறும் என்று நான் நம்புகின்றேன் குறிப்பாக தமிழகத்தில் உள்ள  முக்கிய பிரச்சனைகளை பேசி தீர்க்கின்ற அவையாக அமையவேண்டும்
இவ்வாறு தெரிவித்தார்.
பேட்டி - ஜி.கே.வாசன் –த.மா.கா.
தலைவர் 


No comments:

Post a Comment