Monday 31 August 2015

முன்னாள் மத்திய மந்திரி கரூர் கோபால் மரணம்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இரங்கல்

முன்னாள் மத்திய இணை மந்திரி கரூர் கே.கோபால் (82). இவர் திருவான்மியூர் சீனிவாசபுரத்தில் வசித்து வந்தார். வயது முதிர்வு காரணமாக இன்று மரணம் அடைந்தார். அவரது மரணம் தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:–
மாணவ பருவத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியில் மிகுந்த ஈடுபாட்டோடு பணியாற்றியவர். 1971 முதல் 1980 வரை கரூர் மக்களவை தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட காளியண்ணன் கோபால் மத்திய நிதித்துறை, பாராளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சராக மிகச்சிறப்பாக பணியாற்றிவர்.
இந்திரா காந்தியின் தலைமையில் மிகத் தீவிரமாக பணியாற்றிய முற்போக்கு சிந்தனை கொண்ட கோபால் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
கரூர் அருகே உள்ள வாங்கல் பகுதியை சார்ந்த இவர் கரூர் தொகுதிகளில் இருமுறை எம்.பி ஆக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது


No comments:

Post a Comment