Monday 24 August 2015

ஜம்மு-காஷ்மீரில் மிக்-21 தாக்குதல் விமானம் விழுந்து நொருங்கியது - தொடருது விமான விபத்து

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பட்காம் மாவட்டத்தில் மிக்-21 தாக்குதல் ஜெட் விமானம் விபத்துக்குள்ளாகி விழுந்து நொருங்கியது. நல்வாய்ப்பாக, விமானத்தை ஓட்டிச் சென்ற விமானி பத்திரமாக வெளியேறி உயிர் பிழைத்தார்.
 

 
ஜம்மு-காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரிலிருந்து வழக்கமான ரோந்துப்பணிக்காக புறப்பட்டது மிக்-21 ரக விமானம்.
 
இதுகுறித்து பாதுகாப்பு பேச்சாளர் எஸ்.டி.கோஸ்வாமி கூறுகையில், இந்திய விமானப் படைக்கு சொந்தமான மிக்-21 போர் விமானம், பட்காம் மாவட்டம், சோய்பா பகுதியில் காலை 10:59 மணிக்கு விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த இடத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
 

 
விமானத்தை ஓட்டி சென்ற விமானி சரியான நேரத்தில், விமானத்திலிருந்து வெளியேறியதால் உயிரிழப்பு ஏற்படவில்லை. மேலும் அவர் இந்திய ராணுவத்தின் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டார்.
 
இந்த விமான விபத்து குறித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும் பாதுகாப்பு பேச்சாளர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment