Monday 24 August 2015

5 ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் புதிய தலைமுறைக்கு கரூர் பூமி வாழ்த்து

5 ம் ஆண்டில் புதிய தலைமுறை ! கரூர் பூமி வாழ்த்து


தமிழ்நாட்டில் செய்திச் சேனலெல்லாம் எடுபடாதப்பா. கிட்டத்தட்ட ஒரு வருசமாச் சொல்றாங்கீப்பா எப்பதான் ஆரம்பிக்கப்போறீங்க. வந்தா மாதிரிதான்...ஆனானப்பட்ட அவங்களாலேயே செய்திச் சேனலை சக்சஸ்ஃபுல்லா நடத்த முடியலை இதுல நீங்க வேற. அதுசரி அது என்னப்பா எல்லா டிவியும் ரெண்டெழுத்துல பேர் வைக்கிறாங்க உங்க டிவி என்னன்னா புதிய தலைமுறைன்னு நீளமா அதுவும் தமிழ்ல பேர் வைக்கிறாங்க..என்ன இருந்தாலும் இதுவும் ஒரு கட்சிச் சேனல்போலத்தான் இருக்கப்போகுது...என்னமோ போங்க.
புதிய தலைமுறை டிவி தனது ஒளிபரப்பைத் தொடங்குவதற்கு கிட்டத்தட்ட ஒரு ஆண்டு வரை பல்வேறு தரப்பினரிடமிருந்து வந்த கேள்விக்கணைகள், சலிப்பு வார்த்தைகள், கேலி கிண்டல் வார்த்தைகள் என அத்தனையையும் புதிய தலைமுறைக் குழுவினர் நம்பிக்கை என்னும் கேடயத்தைக் கொண்டு புன்னகையுடன் எதிர்கொண்டோம்.
24.8.2011 அன்று ஒரே ஒரு சுவிட்ச் ஆன் செய்யப்பட்ட போது தமிழ்கூறும் உலகில் அத்தனை தொலைக்காட்சிகளிலும் பளீரென புதிய தலைமுறை மின்னித் தோன்றியது. அந்த நிமிடம் குழுவினர் உள்ளத்தில் எழுந்த உணர்வுகளை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.பலரின் கேள்விகளுக்கு அன்று பதில் கிடைத்தது.
இந்த சாதனைப்பயணத்தின் தொடக்கத்திற்கும், இப்போதும், எப்போதும் முதுகெலும்பாக இருக்கும் நிர்வாகம், பாதையின் கடினத்தன்மை பற்றி கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாத குழுவினர் என நான்கு ஆண்டுகளை வெற்றிகரமாகக் கடந்து ஐந்தாவது ஆண்டில் இன்று 24.8.2015 ல் அடியெடுத்து வைக்கிறது புதிய தலைமுறை.
இன்று..."செய்திச் சேனல்னா புதிய தலைமுறைதான்" என்கிற வார்த்தைகள் காதுகளில் விழுகின்றன.
சக பயணிகளுக்கு வாழ்த்துக்களும், நேயர்களுக்கு நன்றிகளும் தெரிவித்துக்கொள்கிறது உங்கள் கரூர் பூமி

No comments:

Post a Comment