Friday 28 August 2015

லண்டனில் டாக்டர் அம்பேத்கர் வாழ்ந்த வீட்டை இந்தியா வாங்கியது

லண்டனில் டாக்டர் அம்பேத்கர் வாழ்ந்த வீட்டை இந்தியா வாங்கியுள்ளது.
இதுதொடர்பாக அந்த வீட்டின் தற்போதைய உரிமையாளருக்கும், மகாராஷ்டிர மாநில அரசுக்கும் இடையேயான ஒப்பந்தம் வியாழக்கிழமை கையெழுத்திடப்பட்டது.
இரண்டாயிரத்து ஐம்பது சதுர அடியில் 3 தளங்களைக் கொண்ட அந்த வீடு சர்வதேச நினைவுச் சின்னமாக மாற்றப்படவுள்ளது. மேலும், அங்கு இந்தியக் கலாசார மையமும் அமையவிருக்கிறது.
இந்திய மதிப்பில் ரூ.31 கோடி மதிப்புள்ள அந்த வீட்டுக்கு மகாராஷ்டிர அரசு ரூ.3 கோடி முன்பணம் செலுத்தியிருக்கிறது. மீதமுள்ள பணம் அடுத்த 2 நாள்களில் செலுத்தப்படவுள்ளது.
அந்த வீட்டின் முகப்பில், \"சமூக நீதிக்கான இந்தியப் போராளி அம்பேத்கர் இங்கு வாழ்ந்தார்\' என்ற கல்வெட்டு இடம்பெற்றுள்ளது.

No comments:

Post a Comment