Friday 28 August 2015

துக்ளக் பத்திரிக்கை ஆசிரியர் சோவுடன் ராமதாஸ் சந்திப்பு

அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மூத்த பத்திரிக்கையாளரும், துக்ளக் பத்திரிக்கை ஆசிரியருமான சோ.ராமசாமியை பாமக நிறுவனர் ராமதாஸ் நேரில் சென்று நலம் விசாரித்தார்.

துக்ளக் பத்திரிகை ஆசிரியர்  சோ.ராமசாமி உடல் நலக் குறைவுக் காரணமாக கடந்த சில மாதங்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது இவரது உடல் நிலை தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நேற்று சோ.ராமசாமியை முதலமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனைக்கு  நேரில் சென்று நலம் விசாரித்தார்.

இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று காலையில் அப்பல்லோ மருத்துவமனையில் சந்தித்து  நலம் விசாரித்தார். மேலும் சோ.ராமசாமியின் மனைவியிடம்  மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் ,உடல்நிலை குறித்தும் கேட்டறிந்தார். விரைவில் நலம் அடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் தெரிவித்துக் கொண்டார்

No comments:

Post a Comment