Sunday 30 August 2015

ஒகேனக்கல்லில் பரிசல் கவிழ்ந்து விபத்து - பலி 5பேர் என தகவல்

ஒகேனக்கல்: ஒகேனக்கலில் காவேரி ஆற்றில் பரிசல் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. பரிசலில் 5 பேர் பயணம் செய்தனர். இவர்களில் 2 பேர் ஆற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். ஆற்று வெள்ளத்தில் சிக்கயவர்களை மீட்க தீயணைப்புத் துறையினர் விரைந்துள்ளனர். வௌ்ளத்தில் சிக்கியவர்கள் பற்றி தகவல் எதுவும் இல்லை.
தர்மபுரி மாவட்டம், ஓகேனக்கல் பகுதி மறுகொட்டாய் அருகே பரிசல் கவிழ்ந்து 5 பேர் பலி என தகவல் வந்துள்ளன. இந்நிலையில் ஒரு குழந்தை, மற்றும் 1 பெண்ணின் சடலம் கைப்பற்ற பட்டுள்ளன, மேலும் 3 பேரது நிலைமை என்ன என தெரியவில்லை, இந்நிலையில் மாமரத்துகடவு பகுதியில் மேலும் 2 சிறுவர்கள் பரிசலில் பயணித்தவர்கள் இறந்துள்ளதாகவும் தகவல் வந்துள்ளன. இறந்தவர்கள் யார் என்பதையும் பலி எண்ணிக்கை குறித்தும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

No comments:

Post a Comment