Thursday 27 August 2015

பத்திரிக்கையாளரும், நடிகருமான சோ – வை முதல்வர் ஜெயலலிதா நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார்

மூத்த பத்திரிகையாளரும், திரைப்பட நடிகருமான சோ மூச்சுத் திணறல், சளி காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
உடல்நிலை தேறியதும் அவர் சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள அவரது வீட்டுக்கு திரும்பினார். வீட்டில் இருந்தபடி சிகிச்சையை தொடர்ந்தார்.
சென்னை வந்த பிரதமர் நரேந்திரமோடி சோ வீட்டுக்கு சென்று அவரிடம் உடல்நலம் விசாரித்தார்.
இந்த நிலையில் சோவுக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்று (27-08-15)


மதியம் 12 மணி அளவில் அப்பல்லோ ஆஸ்பத்திரி சென்றார். அங்கு சிகிச்சை பெறும் சோவை சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.
அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றி டாக்டரிடம் கேட்டறிந்தார்.

முதல்வருக்கு முன்னர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழகத்திற்கு வந்த பாரத பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்தது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment