Monday 31 August 2015

இலங்கை கடற்படையினர் மீண்டும் அட்டூழியம் - தமிழக மீனவர்கள் 16 பேர் சிறைபிடித்ததால் பரபரப்பு



இலங்கை கடற்படையினர் அட்டூழியம் செய்து வரும் நிலையில் தற்போது கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 16 பேரை இலங்கைக் கடற்படையினர் சிறை பிடித்து சென்றுள்ளனர்.
சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி தமிழக மீனவர்கள் மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்யப்பட்டிருப்பதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மீனவர் சங்க தலைவர் எஸ்.எமிரேட் கூறும்போது, "கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 16 மீனவர்களும் அவர்களது 3 படகுகளும் காங்கேசன்துரை துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்" என்றார்.

No comments:

Post a Comment