Sunday 30 August 2015

அடையாளம் தெரிந்தது - ஒகேனக்கல் பரிசல் விபத்து பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு - 3 பேர் நீச்சல் அடித்து தப்பி ஓட்டம்- பரிசல் ஓட்டுநர் கைது

சென்னையை கோயம்பேடு ராஜேஷ் என்பவரது திருமண நாளை கொண்டாட ஒகேனக்கல் பகுதிக்கு அவர் மற்றும் குடும்பத்தார்கள் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் என 9 பேர் சென்றுள்ளதாக தகவல் வந்துள்ளது. இதில்  அளவுக்கு அதிகமான நபர்களை ஒரே பரிசலில் ஏற்றி சென்றதாலும், தடை செய்யப்பட்ட பகுதிக்கு, பாதுகாப்பு கவசம் அணியாமல் சென்ற நிலையில் அங்கே பரிசல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மேலும் இச்சம்பத்தில் சுற்றுலா சென்ற 9 பேர் பேரில் 6 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் நீச்சல் அடித்து தப்பி சென்றுள்ளதாக தெரிகிறது. ஒகேனக்கல் மாறுகொட்டாய் அருகே நடைபெற்ற இந்த பரிசல் விபத்து சுற்றுலாத்துறையின் மெத்தன போக்கே காரணம் என தெரிவித்து அப்பகுதி மக்கள் பிரச்சினை ஏற்படுத்த பரிசல் ஓட்டுநர் முருகேஷன் என்பவரை போலீஸார் கைது செய்தனர். மேலும் இந்த பரிசல் விபத்தில் சுதீஸ்கா என்ற குழந்தையும், கோகிலா, கிருஷ்ணமூர்த்தி, ரஞ்சித் உள்ளிட்ட 6 பேர் இச்சம்பவத்தில் பலியாகியுள்ளனர்.  மேலும் தப்பியோடிய 3 பேரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது



No comments:

Post a Comment