Sunday 23 August 2015

ஆந்திராவில் விபத்து - லாரி மீது ரயில் மோதி விபத்து: கர்நாடக மாநில எம்.எல்.ஏ. உள்பட 6 பேர் பலி

ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை லாரி மீது ரயில் மோதிய விபத்தில் கர்நாடக மாநில எம்.எல்.ஏ. உள்பட 6 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியே பெரும் பரபரபுக்கும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள பெனுகொண்டா மண்டலத்தில் இருக்கும் சாலை வழியாக இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் மடகாசிரா என்ற இடத்தில் உள்ள ரெயில்வே கேட் அருகே  லாரி மீது ரயில் மோதி விபத்து்க்குள்ளானது. இந்த விபத்தில் கர்நாடக மாநிலம், தேவதுர்க் தொகுதி எம்.எல்.ஏ.வான வெங்கடேஷ் நாயக், லாரி டிரைவர், கிளீனர் மற்றும் 3 ரயில் பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்து பற்றிய தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புப் படையினர் கவிழ்ந்த பெட்டிகளில் சிக்கியவர்களை மீட்ட்டனர்.படுகாயமடைந்த 8 பயணிகள் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து ஆந்திர போலீஸார் பல்வேறு கட்ட விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.



No comments:

Post a Comment