Friday 30 October 2015

தமிழக அரசின் ரூ50,000கோடி ஊழல் புத்தகம் வெளியீட்டது மக்கள் செய்தி மையம் - மக்களின் அமோக வரவேற்பை பிடித்து தனி சாதனை





தமிழக அளவில் மட்டுமில்லாமல் இந்திய அளவில் தனி இடம் பிடித்துள்ளது மக்கள் செய்தி மையம். சென்னையை சார்ந்த மூத்த பத்திரிக்கையாளர் அன்பழகனின் முயற்சியில் பல்வேறு ஊழல் புத்தகங்களை ஆதாரத்துடன் தகவல் அறியும் சட்டம் மூலம் வெளியீட்டு வரும் இந்த புத்தகம் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் வெளியிடப்பட்டது.

 மக்கள்செய்திமையத்தின் தமிழக அரசின் ரூ50,000 கோடி ஊழல் – சிக்கிய 12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் புத்தக வெளியிட்டு சிறப்புரையாற்றிய திருச்சி வேலுச்சாமி அவர்களுக்கும், புத்தகத்தின் பிரதியை பெற்றுக்கொண்டு உரையாற்றிய சட்ட பஞ்சாய்த்து இயக்கத்தின் தலைவர் சிவ.இளங்கோ அவர்களுக்கும், இந்தியன் மக்கள் மன்றத்தின் நிறுவனர் வாராகி அவர்களுக்கும், விழாவில் கலந்து கொண்ட பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள், சட்ட கல்லூரி மாணவர்கள், நண்பர்கள் மற்றும் பொது மக்கள் அனைவருக்கும் மக்கள்செய்திமையம் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டுள்ளது.
MSM-Book REL THANKS
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
 தமிழக அரசின் ரூ50,000 கோடி ஊழல் புத்தகம் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை, மதுரை, கரூர், விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், வேலூர், திருச்சி, பெரம்பலூர், திருவள்ளூர், சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில், தொகுதிக்கு 100 புத்தகம்  இலவசமாக கொடுக்கப்பட்டு வருகிறது.
  மேலும் இரண்டு சட்டக்கல்லூரி, நான்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஏழு மேல்நிலைப்பள்ளிகளிலும் 500 புத்தகம் இலவசமாக கொடுக்கும்பணி நடைபெற்று வருகிறது.
 மக்கள்செய்திமையத்தின் அடுத்த ஊழல் புத்தகம் 500 பக்கங்களில் 26.1.16 குடியரசு தினத்தன்று வெளியிடப்படும் என மக்கள் செய்திமையத்தின் நிறுவனர் அன்பழகன் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment