Tuesday 20 October 2015

புகைமூட்டம் காரணமாக நாளையும் பள்ளிகள் மூடப்படுகின்றன


பெட்டாலிங் ஜெயா,  20 அக்டோபர்-  புகை மூட்டம் காரணமாக மலேசியாவில் இன்று மூடப்பட்ட பள்ளிகள் நாளை புதன்கிழமையும் மூடப்படும். 
  சிலாங்கூர், புத்ராஜெயா, கோலாலம்பூர், கூச்சிங், பாடாவான் பாவ், லுண்டு, செரியான், சமாராஹான், சிமுஞ்சான், லுபோக் அந்து, வட கிந்தா, தென் கிந்தா, மஞ்சோங், தஞ்சோங் மாலிம், கோல மூடா, யான் ஆகிய இடங்களிலுள்ள பள்ளிகள் நாளை மூடப்படும். 

 அதேவேளையில், மலாக்கா, நெகிரி செம்பிலான், தவாவ், லஹாட் டத்து, செம்போர்னா, குனாக், மூவார், லேடாங், சிகாமாட் ஆகிய பகுதிகளிலுள்ள பள்ளிகள் நாளை மீண்டும் திறக்கப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. 

No comments:

Post a Comment