Tuesday 20 October 2015

தமிழகத்தில் தொடர் விடுமுறை: 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்




ஆயுத பூஜை, விஜயதசமி, மொஹரம் பண்டிகை என தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்களின் வசதிக்காக செவ்வாய்க்கிழமை முதல் பல்வேறு ஊர்களுக்கும் 500 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
முக்கிய ரயில் நிலையங்கள் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நேற்று கூட்டம் அலைமோதியது.
இதனால், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு 500 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment