Friday 23 October 2015

மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்க வரைவு அறிக்கை வெளியீடு - ஒருங்கிணைப்பாளர் வை.கோ




மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கத்தின் குறைந்தப்பட்ச செயல் திட்ட வரைவு அறிக்கை வெளியிடப்பட்டது

இந்த வரைவு அறிக்கையை இறுதி செய்து முழு அறிக்கையாக நவ,2ல் வெளியிடப்படும் என்றும் குறைந்தபட்ச செயல்திட்ட விளக்க பொதுக்கூட்டம் கோவையில் நவ.25ம் தேதி நடைபெறும் என வைகோ தெரிவித்துள்ளார். 

மேலும், விலைவாசி உயர்வை கண்டித்து நவ.3ல் மாவட்ட தலைநகரங்களில் கூட்டியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் கருத்து சுதந்தரத்திற்கு எதிரான செயலுக்கு நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தும், தலித் சிறுபான்மையினர் மீதான தாக்குதலை கண்டித்தும் அக்டோபர் 31-ல் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment