Sunday 18 October 2015

நடிகர் சங்க தேர்தல்: மூன்று அடுக்கு பாதுகாப்புடன் நடிகர், நடிகைகள் வாக்களிப்பு


தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க தேர்தல் நடைபெறும் தனியார் பள்ளி வளாகத்தை சுற்றிலும் மூன்று அடு்க்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 24 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. இணை ஆணையர் மற்றும் 2 துணை ஆணையர் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே வாக்கு அளிக்கும் இடத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

சென்னைக்கு வாக்களிக்க வெளியூரில் இருந்து ஆயிரத்து 175 பேர் வந்துள்ளனர். ஓட்டுப் போட கூடியவர்களில் 982 பேர் நடிகர்கள், நாடக நடிகர்கள் 957 பேர் துணை நடிகர்கள் ஆயிரத்து 200 பேரும் வாக்களிக்க உள்ளனர்.

No comments:

Post a Comment