Monday 19 October 2015

ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடுக்கு தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் வாழ்த்து


தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:–
எனக்கு அழைப்பிதழ் அனுப்பியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அடிக்கல் நாட்டுவிழா நடக்கும் அன்று எனது கட்சி நிகழ்ச்சிகள் ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ள காரணத்தினால் அந்த மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சியில் என்னால் கலந்துக் கொள்ள இயலாது.
இந்த விழா பிரதமர் நரேந்திரமோடியுடன் சிறப்பாக நடைபெற மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தலைநகரை அனைத்து தொழில் நுட்ப வசதிகளோடு ஒரு முன் மாதிரியான தலைநகரமாக நீங்கள் நிர்மானிப்பீர்கள். அதற்கான அனைத்து திறமைகளும், முயற்சியும் உங்களிடம் நிறைவாக உள்ளது. அதோடு ஆந்திர மக்களின் ஆதரவும் ஆண்டவனின் ஆசியும் உங்களுக்கு துணை நிற்கட்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

No comments:

Post a Comment