Thursday 29 October 2015

கரூர் அருகே அ.தி.மு.க வினரை தாக்கிய மாஜியின் கைப்புள்ளைகள் – உண்மையான அ.தி.மு.க வினர் 2 பேருக்கு கத்திக்குத்து






கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பகுதியை சார்ந்த யுவராஜ் (வயது 26), பிரபாகரன் (வயது 27), இவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாயனூரை அடுத்த மணவாசியில் நடைபெற்ற எம்.எல்.ஏ காமராஜின் பூமி பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மேலும் அம்மாவின் சாதனைகள் குறித்த விளம்பரத்தட்டிகள், மாவட்ட ஜெ பேரவை சார்பில் விளம்பரத்தட்டிகள் என பல்வேறு அ.தி.மு.க தட்டிகளை அப்பகுதியில் வைத்திருந்தனர். இதனை பொறுக்காத மாஜி மந்திரியும், மாவட்ட செயலாளருமான செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் மற்றும் கைப்புள்ளைகளான திருவேங்கடம், கார்த்திகேயன் உள்ளிட்ட 9 பேர் மாயனூர் ஒப்பந்தக்காரரும், மாஜியின் பினாமியுமான எம்.சி.எஸ்.சங்கர் ஆனந்த் தூண்டுதலின் பேரில் சரமாரி தாக்கியதோடு, கத்தியாலும் குத்தியுள்ளனர். மேலும் இச்சம்பவம் அறிந்த மாயனூர் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். மாஜியின் பதவிப்பறிப்பிற்கு பரிசாக இந்த உண்மையான அ.தி.மு.க வினருக்கு கத்திக்குத்து நடந்துள்ளது என புலம்புகின்றனர். மற்ற அ.தி.மு.க வினரும், பிற கட்சி நிர்வாகிகளும்.

No comments:

Post a Comment