Saturday 24 October 2015

சவுதி அரேபியாவில் தமிழக பெண் கைவெட்டப்பட்ட விவகாரம்:பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடிதம்


சவுதி அரேபியாவில் தமிழகத்தை சேர்ந்த பெண் கை வெட்டப்பட்ட விவகாரத்தில் இந்தியா தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் கடிதம் எழுதி உள்ளார்.

பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடிதத்தில் கூறியிருப்பதாவது:

சவுதி அரேபியாவிற்கு வீட்டு வேலைக்கு சென்ற வேலூரை சேர்ந்த கஸ்தூரி முனி ரத்தனம் என்பவர் மிகுந்த துயரத்தில் உள்ளார். கஸ்தூரியின் நிலை மோசமாக உள்ளதால் விரைந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய சிகிச்சை, நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் பாதுகாப்பாக நாடு திரும்ப நடவடிக்கை எடுக்கவேண்டும். கஸ்தூரி முனி ரத்தனம் விரைவில் நாடு திரும்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் இவ்வாறு பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதி உள்ளார்.

No comments:

Post a Comment