Thursday 29 October 2015

சென்னை ஏர்போர்ட்டில் சிஆர்பிஎப் வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை ? ஏன் என விசாரணை


சென்னை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் பாலுக் ராஜ்பாக் சிங். மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரரான அவர் சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் அவர் இன்று விமான நிலையத்தில் உள்ள பன்னாட்டு முனைய வருகைப் பகுதியில் இருக்கும் கழிவறைக்கு சென்றார். கழிவறைக்குள் அவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். ராஜ்பாக் சிங் தற்கொலை செய்து கொண்ட தகவலை காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர். பணியில் இருந்த அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து இதுவரை தகவல் எதுவும் இல்லை. இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment