Sunday 25 October 2015

கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம் - விஷால் பேட்டி

\
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்குப் பிறகு முதல் முறையாக அச்சங்கத்தின் செயற்குழு கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் நடைபெற்றது. சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் நடிகர் நாசர் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. சங்கத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களித்த மூத்த உறுப்பினர்கள் உள்பட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம். பாண்டவர் அணி என்ற பெயரை சிலர் தவறாக பயன்படுத்துகின்றனர். பாண்டவர் அணி என்ற பெயர் கைவிடப்படுகிறது. எந்த சங்கத்திற்கும் நாங்கள் ஆதரவோ, எதிர்ப்போ இல்லை என்றார்

No comments:

Post a Comment