Tuesday 20 October 2015

அமராவதி நகர் புதிதாக உருவாவதையடுத்து சந்திரபாபு நாயுடுவுக்கு ஜெயலலிதா வாழ்த்து


ஆந்திர பிரதேசத்தின் புதிய தலைநகரான அமராவதிக்கு அடிக்கல் நாட்டு விழா நடத்தப்படுவதை தொடர்ந்து, அந்த மாநிலத்தின் முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு ஜெயலலிதா வாழ்த்து கடிதம் எழுதியுள்ளார்.

கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது, ஆந்திர பிரதேச மாநிலத்தின் புதிய தலைநகர் அமராவதிக்கு அடிக்கல் நாட்டுவிழா 22–ந் தேதி (நாளை) நடத்தப்படுவதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். கடும் முயற்சி செய்து இதை நனவாக்கிய உங்களை நான் இந்தத் தருணத்தில் வாழ்த்துகிறேன்.

இந்த நன்நாளில் தமிழக மக்கள் சார்பில் ஆந்திர பிரதேச மக்களுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஆந்திர பிரதேசம் மாநில மக்களின் வளர்ச்சிக்கும் செழிப்புக்கும் புதிய தொடக்கமாக இந்த விழா அமையும் என்று நம்புகிறேன். இந்த விழா மிகுந்த வெற்றி பெற வாழ்த்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment