Sunday 18 October 2015

நடிகர் சங்க தேர்தல்: விஷால் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வடிவேல் குற்றச்சாட்டு - தோல்வி பயத்தால் தான் இது நடந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு


தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்று வருகிறது.
இன்று காலை முதலே வாக்குச்சாவடிக்கு நடிகர், நடிகைகள் ஆர்வமுடன் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். பெரிய நடிகர், நடிகைகள் பெரும்பாலும் காலையில் வாக்களித்து சென்று விட்டனர். இந்நிலையில் தற்போது வாக்கு மையத்தில் ஒரு அசாதாரன சூழல் நிலவுகிறது.
வாக்குச் சாவடிக்குள் நடிகை சங்கீதாவை தவறான வார்த்தைகளால் பேசியதோடு அவரை தள்ளிவிட முயன்றதாக கூறப்படுகிறது. இதை தட்டிக்கேட்ட விஷால் மீது தாக்குதல் நடத்த முயன்றதாகவும்,
விஷால் அணி வெற்றி பெரும் தருவாயில் இருப்பதால் அசாதாரண சூழலை ஏற்படுத்தி தேர்தலை நிறுத்த முயல்வதாக வடிவேல் குற்றம் சாட்டியுள்ளார்.

No comments:

Post a Comment