Sunday 18 October 2015

யார் ஜெயித்தாலும் முதலில் தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று பெயரை மாற்ற வேண்டும்: நடிகர் ரஜனிகாந்த் வேண்டுகோள்




தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடிகர் ரஜனிகாந்த் தனது வாக்கை அதிகாலையிலே பதிவு செய்தார். கபாலி படப்பிடிப்புக்காக மலேசியா செல்ல வேண்டிய காரணத்தினால் அவர் அதிகாலையிலே வந்து வாக்கை பதிவு செய்தார்.

பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,

நாம் நடிகர்கள் எல்லாம் ஒரே குடும்பம், ஒரே இனம், ஒரே ஜாதி, நமக்குள்ள எப்போதுமே ஒற்றுமை இருக்கும், இருக்கனும். சமீப காலமாக சில வாக்கு வாதங்கள் நடந்து வந்தன அது நடந்து விட்டது. அதற்காக நமக்குள்ள ஒற்றுமையில்லை என்று ஊடகங்கள், மக்கள் யாரும் நினைக்க கூடாது. ஒரு போட்டி வந்து விட்டது மிக நன்று, யார் ஜெயித்தாலும் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். என்னுடைய இரண்டு வேண்டுகோள், 

யார் ஜெயித்து வந்தாலும் முதலில் தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரை எடுத்து விட்டு தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று மாற்ற வேண்டும். 

நீங்கள் எல்லோரும் ஆயிரம் முறை சிந்தித்து வாக்குறுதிகளை கொடுத்திருப்பீர்கள் உயிரே போனாலும் சரி ஜெயித்தவர்கள் தங்கள் வாக்குறுதியை நிறைவேற்றனும். அப்படி நிறைவேற்ற முடியாமல் போய்விட்டால் உடனே ராஜினாமா செய்யுங்கள். அது உங்கள் மனதுக்கும் நிம்மதி, உங்களுக்கு நன்பெயரும் கொடுக்கும், வரும் காலத்தில் நல்ல எடுத்துகாட்டாகவும் இருப்பீர்கள். இவ்வாறு அவர் கூறினார். 

No comments:

Post a Comment