Monday 19 October 2015

பதுக்கலை தடுக்க வேண்டும்: பா.ஜ.க தலைவர் தமிழிசை சொளந்தரராஜன்

பருப்பு விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு பதுக்கலை தடுக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா மாநில தலைவர்  தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.

ஈரோடு மாவட்ட பாரதிய ஜனதாவின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தமிழகத்தில் தேர்தல் எப்போது வந்தாலும் அதனை எதிர்கொள்ள பாரதிய ஜனதா தயாராக இருக்கிறது. சட்டப்பேரவை தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி தற்போது நடைபெற்று வருவகிறது. பருப்பு விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு பதுக்கலை தடுக்க வேண்டும் என்றார். மேலும் எதற்கு எடுத்தாலும் மத்திய அரசு மேல் மாநில அரசும் மற்ற கட்சிகள் பலி போட கூடாது என்றார்.

No comments:

Post a Comment