Thursday 12 November 2015

பூட்டானில் நடைபெற்ற சர்வதேச அளவிலான சிலம்பாட்ட போட்டியில் 20 தங்கபதக்கம் மற்றும் 4 வெள்ளி பதக்கம் வென்ற வீரர் வீராங்கனைகளுக்கு கரூர் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு.



ஊரக விளையாட்டு துறை சார்பாக மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி சென்னையில் நடைபெற்றது.இதில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகள் தேசிய அளவிலான போட்டி திருச்சி மாவட்டம் முசிறியில் உள்ள தனியார் கல்லூரியில் கலந்து கொண்டு கரூர் மற்றும் கிருஷ்ணராயபுரம் ,குளித்தலையில் உள்ள 24 பேர் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்கள் இதில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகள் பூட்டானில் சர்வதேச அளவிலான சிலம்பாட்ட போட்டிக்கு தகுதி பெற்று கடந்த 7 மற்றும் 8 ஆம் தேதியில் நடைபெற்ற போட்டியில் தமிழகத்திலிந்து 24 பேர் கலந்து கொண்டு போட்டியில் கலந்து கொண்டு விளையாடினர்,இதில் 20 பேர் தங்கபதக்கமும்,4 பேர் வெள்ளி பதக்கமும் பெற்று இன்று காலை ரயில் மூலமாக கரூரை வந்த அடைந்தனர்,இவர்களுக்கு பெற்றோர்கள் மற்றும் அந்த அந்த பள்ளி தலைமை ஆசிரியர்கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளை  மாலையிட்டு வரவேற்றனர்.,இது குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில் இந்த போட்டி தங்களை மிகவும் ஊக்கு விப்பதாகவும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினர்.மேலும் இதில் தங்கம் வென்ற வீர்ர்கள் வரும் பிப்ரவரி மாதம் பங்களாதேசத்தில் நடைபெறும் சவுத் ஏசியன் கேம்சில் கலந்து கொள்வார்கள்.

No comments:

Post a Comment