Monday 16 November 2015

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுடன் நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் சந்திப்பு


சமீபத்தில் நடந்து முடிந்த  நடிகர் சங்க தேர்தலில் வெற்றிபெற்று புதிய நிர்வாகிகள் பொறுப்புக்கு வந்துள்ளனர். தலைவராக நாசரும் பொதுச்செயலாளராக விஷாலும் பொருளாளராக கார்த்தியும் துணைத்தலைவர்களாக பொன் வண்ணன், கருணாஸ் ஆகியோரும் பதவியேற்றுள்ளனர். 

இந்த நிலையில் நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் இன்று தலைமை  செயலகத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்தனர்.நடிகர் சங்கத் தேர்தல் சிறப்பாக நடக்க உதவியதற்கு நன்றி தெரிவித்தார்கள்.  இந்த சந்திப்பின்போது  நடிகர்கள் நாசர், விஷால், கார்த்தி, பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் இருந்தனர்.

இந்த சந்திப்பு குறித்து நடிகர் விஷால் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது:-

இன்று தமிழக முதல்வரைச் சந்தித்தோம். அருமையான சந்திப்பு. நடிகர் சங்கத்துக்குத் தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று முதல்வர் தெரிவித்தார்.  முதல்வருக்கு நன்றி’ என்று விஷால், முதல்வருடனான சந்திப்பு குறித்து ட்வீட் செய்துள்ளார். 

No comments:

Post a Comment