Thursday 19 November 2015

சர்வதேச சிலம்பாட்ட போட்டியில் கரூர் பரணிபார்க் பள்ளி மாணவர்கள் சாதனை


சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டி கடந்த நவம்பர் 7,8 ஆகிய தேதிகளில்  பூடானில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி சார்பாக பரணிபார்க் பள்ளி மாணவர்கள் மோகன்பிரசாத், சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சாதனை படைத்தனர்.
இந்திய அணி சார்பாக  விளையாடிய பரணிபார்க் பள்ளி மாணவர்கள் மோகன்பிரசாத் தங்கப்பதக்கமும், சிவக்குமார் வெள்ளிப்பதக்கமும்  பெற்று சர்வதேச அளவில் சாதனை படைத்தனர்.
சிலம்பம் போட்டியில் இந்திய அணி சார்பாக கலந்து கொண்டு விளையாடி சர்வதேச அளவில் சாதனை படைத்து, நமது நாட்டிற்கு பெருமை சேர்த்த மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டுவிழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு பரணிபார்க் கல்விக்குழுமத்தின் தாளாளர் S.மோகனரெங்கன் தலைமை தாங்கினார். பரணிபார்க் கல்விக்குழுமத்தின் செயலர் பத்மாவதி மோகனரெங்கன் முன்னிலை வகித்தார். பரணி பார்க் கல்விக்குழுமத்தின்  அறங்காவலர் சுபாஷினி,  பரணி பார்க் கல்விக்குழுமத்தின் முதன்மை முதல்வர் முனைவர் ராமசுப்பிரமணியன், நிர்வாக அலுவலர் சுரேஷ், பரணிபார்க் பள்ளியின் முதல்வர் சேகர், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் இருபால் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு  மாணவ,மாணவிகளை பாராட்டி வாழ்த்தினர்.


புகைப்படம்: சிலம்பம் போட்டியில் இந்திய அணி சார்பாக கலந்து கொண்டு சர்வதேச அளவில் சாதனை படைத்த மாணவர்கள், பரணி பார்க் கல்விக்குழுமத்தின் தாளாளர் மோகனரெங்கன், பரணி பார்க் கல்விக்குழுமத்தின்  அறங்காவலர் சுபாஷினி, பரணி பார்க் கல்விக்குழுமத்தின் முதன்மை முதல்வர் முனைவர் ராமசுப்பிரமணியன் ஆகியோர் உள்ளனர்

No comments:

Post a Comment