Friday 13 November 2015

அறிக்கை விடும் அரசியல் வாதிகளே கொஞ்சம் கடலூருக்கும் வாருங்கள் - வை.கோ கலக்குவதை பாருங்கள்




ம.தி.மு.க பொதுச்செயலாளரும், மக்கள் நல கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வை.கோ மக்கள் நலனிற்காக பல நல்ல பணிகளை செய்து வரும் நிலையில் அவரது தாயார் மாரியம்மாள், கடந்த சில தினங்களுக்கு முன்னர் உடல் நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். இருப்பினும் தாய் இறந்த துக்கம் தாங்காமல் இருக்கும் நிலையிலும் கடலூரில் பெய்து வரும் தொடர்மழையால் அங்கு வசிக்கு மக்களை கொஞ்சம் கூட நினைக்காமல் ஊடகங்கள் வழியாக வெறும் அறிக்கை மட்டுமே விடும் அரசியல் வாதிகள் மத்தியில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ நேற்று (13-11-15) மாலை 6 மணி முதல் இரவு 12.10 மணி வரை மக்களை ஆங்காங்கே கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அவர்கள் படும் துயரங்களையும் கேட்டறிந்து அவர்களுக்கு மிக்க ஆறுதல் கூறினார். மேலும் இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்று (14-11-15) ஆய்வு நடத்தி வருகிறார். மக்களோடு மக்களாக, மக்கள் நலனில் பாடுபட்டு வரும் இவர் மற்ற அரசியல் வாதிகளை விட சற்று வித்யாசமானவர் என்கின்றனர், இப்பகுதி மக்கள். எது எப்படியோ வெறும் அறிக்கைகள் மூலமாகவே மக்களை சந்திக்காமல் அரசியல் நடத்தும் அரசியல் வாதிகள் மத்தியில் தலைவர் வை.கோ நல்ல மனிதர் என்கின்றனர் கடலூர் பகுதி மக்கள்

No comments:

Post a Comment