Sunday 15 November 2015

குழந்தைகள் தின விழாவில் பரணி பார்க் பள்ளி மாணவ, மாணவிகள் அசத்தல் - பரணிபார்க் கல்வி குழுமத்தில் குழந்தைகள் தினவிழா கொண்டாட்டம்



ஜவஹர்லால் நேரு பிறந்த தினத்தை இந்தியா முழுவதும் குழந்தைகள் தினமாக கொண்டாடுவது வழக்கம் இந்நிலையில் பரணிபார்க் கல்வி குழுமத்தில்  குழந்தைகள் தினவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு பரணிபார்க் கல்விக்குழுமத்தின் தாளாளர் மோகனரெங்கன் தலைமை தாங்கினார். செயலாளர் பத்மாவதி மோகனரெங்கன் முன்னிலை வகித்தார். பரணிபார்க் கல்விக்குழுமத்தின் முதன்மை முதல்வர் முனைவர்  ராமசுப்பிரமணியன் குழந்தைகள் தின வாழ்த்துக்கூறி மாணவர்களிடையே உரையாற்றினார்.

இவ்விழாவில்  கே.ஜி வகுப்பு குழந்தைகள் 160 பேர் தேசத்தலைவர்கள் போல் வேடமணிந்து வந்திருந்தனர்.  மேலும் கார்டூன் கதாநாயர்களைபோல் வேடமணிந்தவர்கள் குழந்தைகளை மகிழ்விக்கும் வண்ணம் ஆட்டமும் ஆடியும், குழந்தைகளுக்கு கைகொடுத்தும் குழந்தைகளை வெகுவாக கவர்ந்தனர். விழா முடிவில் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை  பரணிபார்க் கல்விக்குழுமத்தின் நிர்வாக அலுவலர் சுரேஷ் மற்றும் இருபால் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment