Saturday 28 November 2015

தமிழினத்தலைவர் மேதகு பிரபாகரனின் 61 வது பிறந்தநாள் மற்றும் மாவீரர் நினைவேந்தல் நிகழ்ச்சி




தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 61 வது பிறந்த நாள் மற்றும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று (27.11.2015) மாலை 7.00 மணியளவில் கரூர் மாவட்ட ம.தி.மு. அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கரூர் மாவட்ட ம.தி.மு.க பொறுப்புக்குழு தலைவர் கபினி.சிதம்பரம் தலைமையேற்றார். ம.தி.மு.க. மாநில இலக்கிய அணி துணை செயலாளர் பொத்தனூர் ஈழபாரதி முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் மாநில, மாவட்ட, நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வில் ஈழப்போரில் உயிர் நீத்த மாவீரர்களுக்கு வீர வணக்கமும், அஞ்சலியும் செலுத்தும் வண்ணம் மெழுகுவர்த்தி ஏந்தி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில் மாநில இளைஞரணி துணை செயலாளர் ஆசை சிவா, மாவட்ட பொருளாளர் ஆர்த்தியா.பொன்னுசாமி, இணையதள நிர்வாகி கரூர் சித்தார்த் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மேலும் செங்காந்தல் மலர் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது

1 comment:

  1. கரூர் மாவட்ட செய்திகளை உடனுக்குடன் பதிவிடும் தங்கள் இணையத்திற்கு நன்றிகள்.

    ReplyDelete