Friday 13 November 2015

தமிழகத்தில் மழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 55 ஆக உயர்வு





தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மழைசார்ந்த விபத்துகளால் நேற்றைய நிலவரப்படி மாநிலம் முழுவதும் 48 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை தற்போது 55 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் பல்வேறு பகுதிகளில் வீடுகளில் தண்ணீர் பகுந்துள்ளதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குடிநீருடன் கழிவுநீர் கலந்திருப்பதாகவும், கொசுத்தொல்லை அதிகமாக இருப்பதாகவும், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சென்னை மாநகராட்சி விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு வீடுகளில் புகுந்துள்ள மழை நீரை வெளியேற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

No comments:

Post a Comment