Sunday 29 November 2015

திருப்பதி கோயிலில் ஒரே நாளில் 1.77 கோடி உண்டியல் காணிக்கை


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று அதிகாலை 3 மணி முதல் மாலை 6 மணிவரை 15 மணிநேரத்தில் 44 ஆயிரத்து 816 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இலவச தரிசனத்துக்கான வைகுண்டம் மையத்தில் 15 அறைகளில் காத்திருந்த பக்தர்கள் 6 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

மலைப்பாதை வழியாக நடந்துவந்து திவ்ய தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் 9 அறைகளில் காத்திருந்து 4 மணி நேரத்துக்கு பிறகு தரிசனம் செய்தனர். 300க்கான டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். நேற்று முன்தினம் காலை முதல் நள்ளிரவு வரை தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்று எண்ணப்பட்டது. இதில் பக்தர்கள் 1.77 கோடியை காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

No comments:

Post a Comment