Thursday 12 November 2015

மக்கள் நல கூட்டணிக்கு ம.தி.மு.க இணையதள நிர்வாகிகள் அயராது பாடுபட வேண்டும் கரூரில் நடைபெற்ற ம.தி.மு.க இணையதள நண்பர்கள் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம்





கரூர் மகாத்மா காந்தி ரோட்டில் உள்ள மறுமலர்ச்சி தி.மு.க மாவட்ட அலுவலமான கரூர் தாயகத்தில் மாவட்ட அளவிலான இணையதள நண்பர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில இலக்கிய அணி துணை செயலாளர் பொத்தனூர் ஈழபாரதி, மாநில இளைஞரணி செயலாளர் ஆசை சிவா, மாவட்ட பொருளாளர் ஆர்த்தியா பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கரூர் மாவட்ட இணையதள ஒருங்கிணைப்பாளர் கரூர் சித்தார்த் தலைமை ஏற்றார்.  முன்னதாக வீரத்தாயார் வை.கோ வின் தாயார் மறைவிற்கு இரங்கல் செலுத்தி விட்டு கூட்டம் நடத்தப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில் மாநில மறுமலர்ச்சி தி.மு.க மாணவர் மன்ற செயலாளர் குளித்தலை சசிகுமார் அனைவரிடமும் ஆலோசனைகளை வழங்கினார். அப்போது வரும் 2016 ம் தேதி மறுமலர்ச்சி தி.மு.க கூட்டணியான மக்கள் நல கூட்டணியின் வளர்ச்சிக்கு அதிகளவு மறுமலர்ச்சி இணையதள நண்பர்கள் உழைக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் மேலும் இக்கூட்டத்தில் மாநில நிர்வாகி ஏ.டி.தங்கவேல், மாவட்ட நிர்வாகி அருண் தங்கவேல், கரூர் ஒன்றிய செயலாளர் இளங்கோ, க.பரமத்தி ஒன்றிய செயலாளர் கரியாம்பட்டி இளங்கோ, மாநில நெசவாளர் அணி துணை செயலாளர் ஏ.கே.பழனிச்சாமி, க.பரமத்தி ஒன்றிய துணை செயலாளர் குடை சண்முகம், ஒன்றிய இளைஞரணி செயலாளர் அன்பரசன், நிர்வாகிகள் செந்தில், திருமூர்த்தி, முகேஷ் ஈழவன் உள்ளிட்ட கரூர் மாவட்ட நிர்வாகிகள் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வரும் சட்டசபை தேர்தலில் தமிழினத்தலைவர் வை.கோ அவர்களின் ஒருங்கிணைப்பில் உள்ள மக்கள் நலக்கூட்டணிக்கு இணையதள நண்பர்கள் பணிபுரிய வேண்டுமென ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது, முன்னதாக மறைந்த வீரத்தாயார் மாரியம்மாள் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு பின்னர் கூட்டம் தொடங்கியது

1 comment:

  1. இந்நிகழ்வு கரூர் இணைய நண்பர்களின் கூட்டுமுயற்சிக்கு கிடைத்த வெற்றி. மதிமு கழக பொறுப்பாளர்கள் உள்ளிட்ட அனைவர்களின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஏற்று நடைபெற்ற நிகழ்வு என்பது தாங்கள் அறிந்த ஒன்று. தொடர்ந்து இது போன்ற நிகழ்வுகளுக்கு தங்களின் ஒத்துழைப்பையும், ஆலோசனைகளையும் நல் ஆதரவையும் வேண்டுகிறோம்.

    ReplyDelete