Saturday 21 November 2015

கரூர் மாவட்ட ம.தி.மு.க இணைய நண்பர்களின் வேண்டுகோள் - வரும் டிசம்பர் 13 ம் தேதி சென்னையில் வை.கோ பங்கேற்கும் கூட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்



கரூர் மாவட்ட ம.தி.மு.க இணைய நண்பர்களின் வேண்டுகோளில் தெரிவித்துள்ளதாவது.,
டிசம்பர் 13 சென்னையில் நடைபெற உள்ள தலைவர் வைகோ பங்கேற்கும் இணைய நண்பர்கள் கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்கும் கரூர் மாவட்ட இணைய நண்பர்கள் தங்கள் வருகையையும், அலைபேசி எண்ணையும் பதிவு செய்தால் வாகன ஏற்பாட்டிற்கு எளிதாக இருக்கும். கால அவகாசம் குறைவாக உள்ளதால் தங்களது வருகையை உறுதிப்படுத்த வேண்டுகிறோம்.
கரூர் மாவட்ட இணைய நண்பர்கள்.
டிசம்பர் 13 நிகழ்வு ...என்பது நம் கனவுகளின் சங்கமம் ...
முதலில் நாம் நம்மை பலப்படுத்தி கொள்ள வேண்டிய தெளிவு அவசியம் ...முகனூலில் ....இணையத்தில் ...நாம் எப்படி செயல்பட வேண்டும் ...எதை முன்னெடுக்க வேண்டும் என்ற பார்வை முக்கியம் ...மாற்றத்தை விரும்பும் இளையவர்களும் ...நம்மில் புதியவர்களும் ஒருங்கிணையும் தருணம்...
மக்கள் நல கூட்டணியின் கொள்கை விளக்க கூட்டம் ....அரசியல் நிகழ்வாக தொடரும்....இன்னும் இதில் சில கட்சிகள் இணையலாம்...தேர்தலுக்கும் ...பரப்புரைக்கும் நிறைய வாய்ப்பு இருக்கிறது....ஆனால் இணையதள தோழர்களுடன் தலைவர் வைகோ அவர்கள் சந்திப்பு என்பது மூன்று வருடங்களுக்கு பிறகு ஏற்படுத்தப்பட்ட ஒன்று ...
நேற்று ஒரு இடம் ...இன்று காலை ஒரு நிகழ்வு...மாலை ஒரு ஊர்...நாளை ஒரு போராட்டம் என ஓய்வறியாத உழைப்பாளி வைகோ அவர்களின் தோள் கொடுக்க நாம் கூடும் கலந்துரையாடல் இது ....
இதில் எந்த மனக்குழப்பமும் இல்லாமல் தோழர்கள் கலந்து கொள்ள முயற்சியுங்கள் ....இது நம் வீட்டு நிகழ்வு ...அதை சிறப்படைய வைப்பது உங்கள் பொறுப்பு....
கருத்துகள் என்று சொல்லி மற்றவர் மனதில் மாற்றத்தை உருவாக்காமல் ஒன்று படுவோம்...நிகழ்வின் ஏற்பாடுகள் மாற்றுவது என்பது எழுதுவது போல அத்தனை சுலபமல்ல என்பதை உணருங்கள் ...
நிகழ்வு டிசம்பர் 13 ...உறுதி ...ஒன்றிணைய வாருங்கள் ..நமது கடமை முதலில் முக்கியம் ... என தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment