Tuesday 24 November 2015

பக்தர்களின் பாதுகாப்பு கருதி சதுரகிரி மலைக்கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்குத் தடை





விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்புப் பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி மலைக் கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வத்திராயிருப்பு பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி மலைக் கோயில். இது புகழ்பெற்ற சிவஸ்தலமாகும்.
கார்த்திகை மாதம் என்பதாலும், நாளை திருக்கார்த்திகை தினம் என்பதாலும், ஏராளமான பக்தர்கள் சதுரகிரிக்கு செல்வது வழக்கம்.
ஆனால், மழை காரணமாக ஆற்றில் அதிக நீர் செல்வதால் பக்தர்களின் பாதுகாப்புக் கருதி நாளை மற்றும் நாளை மறுநாள், சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment