Sunday 22 November 2015

தொடர் மழை எதிரொலி !!!.. கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை: புதுவை, காரைக்காலில் தனியார் மற்றும் அரசு பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை - மற்ற மாவட்டங்களுக்கும் உண்டா ?




தமிழகத்தில் ஏற்கனவே ஆங்காங்கே தொடர் கன மழை பெய்து வரும் நிலையில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ள நிலையில் கடலூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் மீண்டும் ஒரு கன மழைக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பல பகுதிகளில் தற்போது பரவலாக கன மழை பெய்து வருகிறது. சென்னையிலும், புறநகர்களிலும் தொடர்ந்து விடாமல் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடலூரில் கன மழை பெய்து வருகிறது. இதையடுத்து அங்கு நாளை பள்ளி கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சுரேஷ் குமார் விடுமுறை அறிவித்துள்ளார். புதுச்சேரி - காரைக்கால் அதேபோல யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும்,அதற்கு உட்பட்ட காரைக்கால் மாவட்டத்திலும் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து கல்வி அமைச்சர் தியாகராஜன் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment