Sunday 29 November 2015

புதுவைக்கு இடைக்கால நிவாரணம் கேட்டு மத்திய அரசுக்கு மீண்டும் கடிதம்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தகவல்



முதல்–அமைச்சர் ரங்கசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அவர் கூறியதாவது:–
புதுவையில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்தது. இதனால் புதுவைக்கு மழை சேதமாக ரூ.182.45 கோடி வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஏற்கனவே கடிதம் எழுதி இருந்தேன். அதனை ஏற்று தற்போது மத்திய குழுவினர் புதுவையில் மழை சேதங்களை பார்வையிட வந்துள்ளனர். அவர்கள் சேதங்களை பார்வையிட்டு சேத மதிப்புகளை மத்திய அரசிடம் அறிக்கையாக அளிப்பார்கள். அதன் அடிப்படையில் புதுவைக்கு மத்திய அரசு அதிக நிதி அளிக்கும் என நம்புகிறேன். புதுவையில் மழையால் சேதமடைந்த சாலைகள் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே புதுவைக்கு மழை சேதத்துக்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு நாளை (திங்கட்கிழமை) மீண்டும் கடிதம் எழுத உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஏற்கனவே மழையால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு மத்திய அரசு இடைக்கால நிவாரண நிதி வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில் புதுவைக்கும் மத்திய அரசு இடைக்கால நிவாரண நிதி அளிக்கும் என கூறப்படுகிறது. அவ்வாறு மத்திய அரசு நிதி அளிக்கும் பட்சத்தில் புதுவையில் மழை நிவாரணம் உடனடியாக வழங்கப்படும் என தெரிகிறது.

No comments:

Post a Comment