Sunday 22 November 2015

நாயினால் நடுரோட்டிற்கு இழுத்து வரப்பட்ட அரசுப்பேருந்து சுமார் 30 பேர் படுகாயம் மழையிலும் தொடர்ந்தது விபத்து கரூர் அருகே பரபரப்பு





கரூர் அருகே அரசுப்பேருந்து விபத்து – நாய் குறுக்கே சென்றதால் டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி சாலை ஓரத்தில் இழுத்துச்செல்லபட்டு சாய்ந்த பேருந்து விபத்து-  பயணம் செய்த 30 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கோவையில் இருந்து திருச்சிக்கு கரூர் வழியாக மதியம் பயணித்த அரசு பேருந்து கரூர் அருகே காந்திகிராமம் பகுதியை அடுத்த பெட்ரோல் பங்க் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, அப்போது அந்த சாலையில் திடீரென நாய் குறுக்கே வந்ததாலும், மழையினாலும் பேருந்து கட்டுப்பாட்டை இழந்த அரசுப்பேருந்து சாலையின் ஓரத்தில் அப்படியே இழுத்துச் செல்லப்பட்டு சாலையின் ஒரத்தில் உள்ள பள்ளத்தில் சாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 30 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதில் சுமார் 7 பேர் கரூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கும், மீதமுள்ள நபர்கள் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து பசுபதிபாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இச்சம்பவத்திற்கு காரணமான நாய் பேருந்தின் சக்கரத்தின் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. கடும் மழையில் ஏற்பட்ட இந்த திடீர் விபத்து இப்பகுதியில் பெரும் பரபரப்புக்குள்ளானதோடு, பயணிகள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தால் கரூரிலிருந்து திருச்சிக்கு செல்லும் போக்குவரத்து சுமார் 1 மணி நேரம் பாதிக்கப்பட்டது. மேலும் எந்த நாயினால் இந்த விபத்து சம்பவம் நடந்ததோ, அந்த நாயும் அதே சக்கரத்தில் அடிபட்டு சக்கரத்தோடு, சக்கரமாக மண்ணில் புதைந்து காணப்பட்ட காட்சி நாய் ரசிகர்களிடையே கடும் அதிர்பதியை ஏற்படுத்தியது. மேலும் இச்சம்பவமறிந்த கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ வும், ஜெ பேரவை மாவட்ட செயலாளருமான  எஸ்.காமராஜ் சம்பவத்தில் பாதிக்கபட்டவர்களை அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் நலம் விசாரித்து நேரில் சந்தித்து வருகிறார்

No comments:

Post a Comment