Sunday 29 November 2015

பருவநிலை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரான்ஸ் புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி


பாரிசில் நடைபெறும் பருவநிலை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று பிரான்ஸ் நாட்டிற்கு புறப்பட்டு சென்றார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பருவநிலை மாநாடு நாளை தொடங்குகிறது. இதில் இந்தியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கவுள்ளன. இந்த மாநாட்டில் 147 நாடுகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளன.

இந்த மாநாடு வரும் டிசம்பர் மாதம் 11-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் உலகம் வெப்பமயமாதலை எதிர்கொள்வதில் இந்தியாவின் பங்கு என்பது குறித்து பிரதமர் மோடி  உரையாற்ற உள்ளார்

No comments:

Post a Comment